

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச் சத்தை அடைந்து வரும் நிலையில், இன்று இதுவரை இல் லாத அளவுக்கு அதிகபட்சமாக கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியிருக்கிறது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் களின் எண் ணிக்கை 74 இலட்சத்தை தாண்டியது. 65.24 இலட்சம் பேர் குண மடைந் துள்ளதாக அந்நாட்டு ஊடகங் கள் தகவலை வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. அதே சமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக் கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தக வலின்படி இந்தியாவில் மொத்த எண்ணிக்கை 74 இலட்சத்து 32 ஆயிரத்து 680 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 65 இலட்சத்து 24 ஆயி ரத்து 595 பேர் குணமடைந் துள்ளனர், 7 இலட்சத்து 95 ஆயிரத்து 087 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் மொத்த எண் ணிக்கை 1,12,998 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.


