பிரான்சில் ஈழத்து மாணவி கடலில் மூழ்கி உயிரிழப்பு!

0
266

பிரான்சில் ஈழத்தை பூர்வீகமாக கொண்ட பல்கலைக்கழக மாணவி கடலில் மூழ்கி உயிரிழந்தமை அனைவரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரான்சில் பல்கலைக்கழகத்துக்கு புகுமுக மாணவியாகத் தெரிவுசெய்யப்பட்ட நிலையில், ஐந்து சக மாணவிகளுடன் கடலில் நீராடச் சென்றபோது குறித்த தமிழ் மாணவி கடலின் அலையில் சிக்குண்டு உயிரிழந்த நிலையில் ஏனைய மாணவிகள் உயிர் ஆபத்து இன்றி தப்பியுள்ளனர்.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியை பூர்வீகமாகக் கொண்ட இரஞ்சன் அனித்திரா (வயது 19 ) என்ற மாணவியே உயிரிழந்தவர் ஆவார். இவரின் உயிரிழப்பு அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஆண்டுகளிலும் பிரான்சில் கோடை விடுமுறையில் கடலுக்குச் சென்ற யாழ்.இளைஞர்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

கோடைவிடுமுறையை குளிப்பதற்கு கடலுக்குச் செல்லும் ஒவ்வொருவரும் உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது வீண் உயிரிழப்பைத் தவிர்க்கலாம்.

(எரிமலையின் செய்திப் பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here