சிறிலங்காவின் 9ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு!

    0
    125

    சிறிலங்காவின் 9ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பில் அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்றம் இந்த ஆண்டு மார்ச் 02ஆம் திகதி நள்ளிரவுடன் கலைக்கப்பட்டு, ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடாத்துவதற்கும், அதனைத் தொடர்ந்து, மே 14ஆம் திகதி புதிய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கும் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆயினும் கொவிட்-19 பரவல் காரணமாக, இன்று 05ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் தினம் தள்ளி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது புதிய பாராளுமன்றம் கூடும் திகதி, இம்மாதம் 20 என அறிவிக்கப்பட்டுள்ளது.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here