ஜேர்மன் லண்டவ் தமிழாலய ஆசிரியை திடீர் மரணம்!

0
422

ஜேர்மன் லண்டவ் தமிழாலய ஆசியை விஜயகுமாரி தனீஸ்வரன் (நந்தினி – வயது 46) திடீர் சுகயீனம் காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை சாவடைந்துள்ளார்.

இது குறித்து லண்டவ் தமிழாலயம் தெரிவிக்கையில்,

அமரர் விஜயகுமாரி (நந்தினி) தனீஸ்வரன்
எமது தமிழாலயத்தில் 10 ஆண்டுகளாக மாணவச் செல்வங்களுக்கு சிறந்த ஆசிரியையாக தூய நற்பணியாற்றி யாரேனும் சற்றேனும் சிந்தித்துப் பாராத மரணத்தை 07.07.2020 செவ்வாய்க்கிழமை எய்தினார்.
காலதேவனின் கணக்கா இல்லை விதியின் விளையாட்டா என உணரமுடியாது தவிக்கும் பிள்ளைகள், கணவர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் .
பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள்
தமிழாலயம் லண்டவ்
.
இறுதிக்கிரியைகள்:
வரும் 09.07.2020 வியாழக்கிழமை
பி.பகல்14-17மணி
Hauptfriedhof
76829 Landau

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here