யாழ்.கோப்பாயில் பாரவூர்தியில் நசியுண்ட சாரதி பலி!

0
193

யாழ்ப்பாணம் – கோப்பாய் சந்திப் பகுதியில் கனரக வாகனங்கள் திருத்தகம் ஒன்றில் டிப்பர் பாரவூர்தி ஒன்றைப் பழுது பாா்த்துக் கொண்டிருந்தபோது டிப்பரின் சுமை பெட்டி விழுந்ததில் அதன் சாரதி உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.

திருத்துநர்கள் டிப்பர் பெட்டியினை தூக்கி (ஜாக்) மூலம் உயர்த்தித் திருத்திக் கொண்டிருந்த சமயம் டிப்பர் சாரதி அதனை சரிபார்க்க முயன்றபோது உயர்த்தி விலகியதில் உயர்ந்து நின்ற பெட்டி திடீரென்று விழுந்ததில் பெட்டிக்கு அடியில் சிக்கிய சாரதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மானிப்பாயை சேர்ந்த சிங்கராசா லிங்காதரன் (வயது 41) என்பவர் எனத் தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here