கிளிநொச்சி ஸ்ரீ முருகன் ஆலய கற்பக்கிரகத்தில் பெரும் கொள்ளை!

0
128

கிளிநொச்சி- விவேகானந்தநகர் கிராமத்திலுள்ள ஸ்ரீ முருகன் ஆலயத்தின் கருவறையில் இருந்த வேல் மற்றும் முருகன், வள்ளி, தெய்வானை சிலைகள் கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் இரவு ஆலயத்தின் கூரை ஓடுகள் பிரிக்கப்பட்டு உள் இறங்கிய திருடர்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.

சிலைகளுடன் ஆலயத்தின் பயன்பாட்டில் உள்ள பல பொருட்களும் திருடிச் செல்லப்பட்டுள்ளன. சுமார் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழர் தாயகப் பகுதிகளில் வீடுகளில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் தற்போது மீண்டும் ஆலயங்களில் கைவைக்க ஆரம்பித்துள்ளனர். இதனைத் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுப்பது அவசியமானது. இது சிந்திக்கும் நேரமல்ல அனைவரும் சேர்ந்து செயற்படவேண்டிய நேரம்.

(எரிமலையின் செய்திப் பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here