யாழ்ப்பாணம் – தென்மராட்சி, கொடிகாமம் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட உசன் சந்தியில் இன்று (20.06.2020) சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.

உந்துருளி ஒன்றும் டிப்பர் வாகனமும் மோதியதிலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஒருவர் சம்பவ இடத்தில் பலியானதுடன், மற்றொருவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் இயக்கச்சியைச் சேர்ந்த கண்ணதாசன் கஜீபன் (வயது 18), தங்கராசா சுவேந்திரன் (வயது 18) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் சாரதி தற்போது கொடிகாமம் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். மேலதிக விசாரணையை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

