பிரித்தானியாவில் வாகன சாரதியான பெங்களூர் தமிழர் கொரோனாவிற்குப் பலி!

0
570

பிரித்தானியாவில் வாடகை சாரதியாக பணியாற்றிய தமிழர் ஒருவர் கொரோனாவால் பலியாகியுள்ளார்.

ஹீத்ரோ விமான நிலைத்திற்கு பயணியை அழைத்து சென்றபோதே இந்ந நோய் தொற்றியுள்ளதாக நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த 45 வயதான ராஜேஷ் என்பவரே இந்த கொரோனா நோய்க்கு பலியாகியுள்ளார். இவருடன் கடந்த 8 ஆண்டுகளாக நட்பு பாராட்டிவரும் சுனில்குமார் என்பவரே இந்தியாவில் உள்ள குடும்பத்தினருக்குத் தகவல் அனுப்பியுள்ளார்.

பெங்களூர் நகரில் இருந்து 10 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து சென்றவர்,கடந்த சில வருடங்களாக தனியார் நிறுவனத்தில் வாகன சாரதியாக பணியாற்றி வந்துள்ளார்.இந்ந நிலையில் பங்குனி 10-ந் திகதி லண்டன் ஹீத்ரோ விமான நிலயத்திற்கு சென்று திரும்பிய பின்னரே இந்த நோய் தொற்றியுள்ளது.

அவரது நிலைமை நாளுக்கு நாள் மோசமானதைத் தொடர்ந்து ராஜேஷை வீடியோ அழைப்பில் குடும்பத்தாருடன் பேச வைத்துள்ளா் அவரது நண்பர்.

இந்த நிலையில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ராஜேஷ் சிச்சை பலனின்றி கடந்த ஏப்ரல் 11 அன்று உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here