பிரான்சில் இறந்த யாழ்.சிறுப்பிட்டிப் பெண் மாரடைப்பினாலேயே மரணம்!

0
4664

யாழ்.சிறுப்பிட்டியைச் சேர்ந்தவரும் பிரான்ஸ் NEUILLY SUR MARNE (93330) இல் வசித்துவந்தவருமான சசிதேவி சதீஸ்குமார் (வயது 46) அவர்கள் மாரடைப்பினால் நேற்று11.04.2020 சனிக்கிழமை உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

மருத்துவ மனையில் சத்திர சிகிச்சையின்போது ஏற்பட்ட மாரடைப்பினாலேயே மரணமானதாகவும் கொரோனாவினால் உயிரிழந்தார் என வந்த செய்தி தவறானது எனவும் அவருடைய குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

கொரோனாவினால் உயிரிழந்ததாக முன்னர் வந்த தகவலினால் இவர்களது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு எமது ஊடகப்பிரிவு மனம் வருந்துகின்றது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம் .

(எரிமலையின் ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here