தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தில் மின்சாரம் தாக்கியதில் தொண்டர் பலி!

0
466

தெல்லிப்பழை துர்க்கையம்மன்ஆலயத்தில் துப்பரவு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொழுது மின்சாரம்தாக்கி மல்லாகம் துர்க்காபுரத்தைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான சண்முகராஜ் செந்தூரன்
(வயது- 51) என்ற குடும்பத் தலைவரே இவ்வாறு உயிரிழந்தார்.
ஆலயத் தொண்டர்கள் சிலர் இணைந்து
மண்டபத்தைக் கொம்பிறசர் மூலம்
தண்ணீர் பாய்ச்சி கழுவிக்கொண்டிருந்த
போது, அதிலிருந்து மின் ஒழுக்கு ஏற்
பட்டுள்ளது. இதன்போதே குடும்பத் தலை
வருக்கு மின்சாரம் தாக்கியுள்ளது.
சம்பவத்தையடுத்து அவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச்
செல்லும்போது உயிரிழந்தார் என்று
பொலிஸார் கூறினர்.
இவர் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் மறைந்த தலைவர் தங்கம்மா அப்பாக்குட்டியின் பேரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னரே குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here