நெதர்லாந்து நாட்டில் 128 பேருக்கு கொரோனா தொற்று: இன்று முதலாவது பலி!

0
321

நெதர்லாந்து நாட்டில் 128 பேர் கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளனர். இன்று கொரோனா தொற்றிற்கு உள்ளான நெதர்லாந்து றொட்டடாம் நகரத்தைச் சேர்ந்த 86 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இது நெதர்லாந்தில் கொரோனா தொற்றிற்கு பலியான முதலாவது உயிரிழப்பாகும். இதுகுறித்து அந்நாட்டு ஊடகங்கள் பலவும் செய்திவெளியிட்டுள்ளன.

இதேவேளை, நெதர்லாந்தில் குடும்ப வைத்தியர்கள் தமது வைத்திய நிலையங்களை மூடிவைத்துள்ளதுடன், முன் அனுமதி பெற்றே தம்மை சந்திக்கமுடியும் என வாயிலில் எழுதிவைத்துள்ளார்கள். இதனால் மருத்துவ நிலையத்திற்கு செல்லும் நோயாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்வதைக் காணமுடிந்ததாக எமது செய்தியாளர் அங்கிருந்து தெரிவித்தார்.

https://www.telegraaf.nl/nieuws/1136142244/bekijk-hier-waar-het-coronavirus-in-nederland-toeslaat
https://rtvu.nl/n/2025017/

(நெதர்லாந்திலிருந்து பிரதீபன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here