பிரான்சில் இடம்பெறவுள்ள தமிழ்மொழி அரையாண்டுத் தேர்வு – 2020

0
992

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினால் நடாத்தப்படும் தமிழ்மொழி அரையாண்டுத் தேர்வு எதிர்வரும் 25.01.2020 சனிக்கிழமை இடம்பெறவுள்ளது

இம்முறை அரையாண்டுத் தேர்வில் பாலர்நிலை மாணவர்களுக்கான தேர்வும் முதன்முறையாக இடம்பெறுகிறது எனவும் பிரான்சு ரீதியில் பாலர் நிலை முதல் வனர்தமிழ் 12 வரை 7 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வுக்குத் தோற்றவுள்ளதாகவும் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தெரிவித்துள்ளது.

பாலர் நிலைக்கான தமிழ்மொழி பொதுத்தேர்வு கடந்த ஆண்டு முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே.

தமிழ்மொழிப் பொதுத் தேர்வுக்கு முன்னோடியாக வருடாந்தம் அரையாண்டுத் தேர்வு நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு – ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here