பிரான்சில் இடம்பெற்ற கிளிச்சி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவு விழா!

0
478

பிரான்சில் கிளிச்சி பிராங்கோ தமிழ்ச்சங்கம் – கிளிச்சி தமிழ்ச் சோலைப் பள்ளியின் 20 ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த 18.01.2020 சனிக்கிழமை முற்பகல் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன், ஆசிரியர் மதிப்பளிப்பு, வளர்தமிழ் 12 நிறைவு செய்த மாணவர்களின் மதிப்பளிப்பு என்பனவும் சிறப்பு நிகழ்வுகளாக இடம்பெற்றிருந்தன.

20 ஆம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் சிறப்பு மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது. நடனங்கள், பாடல், நாடகங்கள், பேச்சுக்கள், கவிதை போன்ற நிகழ்வுகள் சிறப்பாக அமைந்திருந்தன. ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் பொருத்தமான பின்னணிக் காட்சிகள் திரையில் காண்பிக்கப்பட்டமை நிகழ்வை மேலும் சிறப்பித்திருந்தது. சிறப்புரைகளும் இடம்பெற்றிருந்தன.

கிளிச்சி நகர பிதா மற்றும் மாநகரசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.

நிகழ்வின் ஆரம்பம் முதல் நிறைவு வரை பெற்றோர்களும் மாணவர்களும் இருந்து நிகழ்வுகளைக் கண்டுகளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here