தமிழக விபத்தில் இலங்கை ஏதிலி ஒருவர் பலி;மனைவியும் குழந்தையும் நிர்க்கதி!

0
422

தமிழகத்தில் செய்யாறு அருகே இடம்பெற்ற வீதி விபத்தில் இலங்கை ஏதிலி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.செய்யாறு வட்டம், பாப்பாதாங்கல் கிராமம் இலங்கை ஏதிலிகள் முகாமைச் சேர்ந்த 46 வயதுடைய கணேசமூர்த்தி என்பவரே உயிரிழந்துள்ளார். இவா் அரசு கலைக் கல்லூரி அருகே மரத்தச்சு வேலை செய்து வருகிறார். இவருக்கு கைக்குழந்தை ஒன்றும் உள்ளது.ஞாயிற்றுக்கிழமை மதியம் சாப்பாட்டிற்காக செய்யாறு -ஆற்காடு வீதியில் உந்துருளியில் சென்றுகொண்டிருந்தார்.

கணேசபுரம் அருகே சென்றபோது வாகனம் ஒன்று மோதிவிட்டுச் சென்றதாக தெரிகின்றது.இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார்.தகவல் அறிந்த செய்யாறு பொலிஸார், கணேசமூர்த்தியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.மேலும், இதுகுறித்து விசாரணைகளை பொலிஸார் நடத்தி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here