நினைவேந்தலுக்குத் தயாராகும் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்!

0
1365

கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் நினைவேந்தல் ஏற்பாடுகள் தற்போது பூர்த்தி அடைந்து வருகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்து அஞ்சலி செலுத்தும் துயிலும் இல்லமான கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் கடந்த வருடம் 20,000ற்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு உயிரிழந்த தங்கள் உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இந்நிலையில் நாளையும் அதிகளவான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்துவர் என ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை வெளியிடுகின்றனர்.

குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தினை அழகுபடுத்தும் பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here