அப்பாவித் தமிழர்களின் அவலங்கள் தொடர நாம் அனுமதிக்கலாமா?

0
385

வலிந்து காணாமலாக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் சகோதரன் இன்று முகநூலில் இடுகையிட்ட வரிகள் இவை…!

இருபத்திமூன்று வருடங்களாக தன் மகனை தேடும் ஒரு தாயின் வலி எனக்குப்புரியும்.
அது என் தாயின் வலி என்பதை தாண்டி, என் தம்பியினை நேசித்த குடும்ப உறவுகள் ஒட்டுமொத்த பேரினதும் வலி.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடும் உறவுகளின் அவலம் மிகுந்த போராட்டம் இன்று ஆயிரம் நாளை தொட்டுவிட்டது.

தாம் தேடும் தம் பாசத்திற்குரிய உறவுகள் உயிருடன் உள்ளார்களா அல்லது இல்லையா என்னும் திண்டாட்டத்திலேயே நோயாளிகளாகி மரணித்துப்போனவர்கள் பலர்.

இந்த அப்பாவி தமிழர்களின் அவலங்கள் தொடர நாம் அனுமதிக்கலாமா?

-அன்பரசன் நடராஜா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here