யாழ்.மூத்த ஊடகவியலாளர் பெருமாள் ஐயா சாவடைந்தார்!

0
531

யாழ்ப்பாணத்தின் மூத்த ஊடகவியலாளர்களுள் ஒருவரான பெருமாள் ஐயா (வயது 85) அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை சாவடைந்துள்ளார்.

தமிழ் ஊடகப்பரப்பில் ஒரு ஜாம்பவான் என்று அழைக்கப்பட்ட பெருமாள் ஈழநாடு பத்திரிகை ஆசிரியராக நீண்ட காலம் பணியாற்றியிருந்தார். 

யாழ்ப்பாணத்தில் வெளிவந்த ஈழநாடு பத்திரிகையை தொடர்ந்து அது மூடப்பட்ட பின்னர் யாழ். உதயன் நாளிதழில் இவரின் பங்கு முக்கியமானது.

இளம் ஊடகவியலாளர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்த அவரை யாழ். ஊடக அமையம் வாழும் போதே மதிப்பளிப்பு செய்திருந்தது. தனது கனிவான பேச்சினால் மற்றவர்களின் குறைகளை உணரவைக்கும் உள்ளம் படைத்தவர்.

அவருடைய இழப்பு தமிழ் ஊடகப் பரப்புக்கே பேர் இழப்பு என்றால் மிகையாகாது.

இன்று சாவடைந்த மூத்த ஊடகவியலாளர் பெருமாள் ஐயாவின் உடல், அவருடைய விருப்பத்திற்கு அமைவாக மருத்துவ மாணவர்களின் போதனைக்காக , யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தினரிடம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை கையளிக்கப்பட்டது!
இறந்தும் வாழ்கிறார் பெருமாள் ஐயா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here