9 ஆவது நாளாகத் தொடரும் நீதிகோரிய நடைபயணம்!

0
336

பாரிசில் இருந்து ஐக்கிய நாடுகள் சபை நோக்கிய நீதிக்கான நடைபயணம் இன்று 9ஆவது நாளாக துறோவா என்னும் நகருக்கு 12 கிலோ மீற்றர் தூரத்திலிருந்து இன்று 05.09.2019 வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பித்துள்ளது.

நேற்றுக் காலை துறோவா மாநில மாநகரசபை முன்பு நாடாத்தப்பட்ட நிழற்பட கவனயீர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து மீண்டும் நடைபயணம் மற்றுமொரு நகரமான Madison’s les Chaource நகரத்தை நோக்கி துறோவா வாழ் நான்கு இளையோர்களும் (குறிப்பாக மூன்று பெண் பிள்ளைகள்) நடைபயணத்தை மேற்கொண்டிருந்தனர்.

நீதிக்கான நடைபயணம் துறோவாவிலிருந்து 12 கிலோமீற்றர் தூரம்வரை நடந்து நேற்றைய 8 ஆம் நாள் நிறைவடைந்த நிலையில் இன்று காலை தொடர்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here