பெல்ஜியம் ஐரோப்பிய ஆணைக்குழு முன்பாக ஆரம்பமான ஐ.நா.நோக்கிய ஈருருளிப் பயணம்!

0
430

தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி ஐ.நா. நோக்கி ஈருருளியில் பயணிக்கும் மனித நேயப் செயற்பாட்டாளர்களின் போராட்டம் பெல்ஜியம் புறுசெல்ஸ் நகரத்தில் இன்று 04.09.2019 புதன்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

பெல்ஜியம் புறுசெல்ஸ் நகரத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய ஆணைக்குழு முன்பாக ஆரம்பமாகியிருக்கும் இந்த மனிதநேயப் போராட்டம் அங்கிருந்து லக்சம்பேர்க் நாட்டை வந்தடைந்து, பின் யேர்மனி ஊடாக பிரான்சு நாட்டை வந்தடையும். அங்கிருந்து சுவிஸ் நாட்டை வந்தடைந்து, சுவிசின் பல முக்கிய நகரங்கள் ஊடாக ஜெனிவா நகரத்தை 16.09.2019 திங்கட்கிழமை வந்தடையும்.

தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி 16.9.2019 திங்கட்கிழமை ஜெனிவா நகரத்தில் ஐ.நா முன்பு நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டப் பேரணியில் இந்த மனிதநேயப் பணியாளர்களும் இணைந்து கொள்வார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here