கிளிநொச்சியில் கரிநாள் போராட்டம்: மக்களோடு ஓரணியில் திரண்ட தமிழ் தலைவர்கள்!

0
255

இலங்கையின் 71வது சுதந்திரதினத்தை தமிழ் மக்கள் இன்று கரிநாளாக கொண்டாடினர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்,அரசியல் கைதிகள்,காணி சுவீகரிப்பென் போராட்ட களங்களில் உள்ள மக்களுடன் இணைந்து அரசியல் கட்சிகள்,பல்கலைக்கழக மாணவ சமூகம் மற்றும் மதத்தலைவர்கள்.பொது அமைப்பு பிரதிநிதிகளென இணைந்து போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்னதாக குவிந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி,தமிழ் மக்கள் கூட்டணி,ஈபிஆர்எல்எவ் உள்ளிட்ட கட்சிகளது தலைவர்களும் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here