சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு செல்ல தயாராகும் பிரித்தானியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் மாணவி!

0
200

பிரித்தானியாவில் சுமார் 30,000 மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்விகற்று வருகிறார்கள். செயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் நில அளவை செய்வது உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கற்று வருகிறார்கள்.

இவர்களில் அதீத திறமை மிக்க 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரித்தானிய விண்வெளி ஆராய்சி மையம் முடிவெடுத்திருந்தது. அதில் மிகத் திறமையாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளார் ஈழத் தமிழ் மாணவி சியோபன் ஞானகுலேந்திரன்.

இவர் நுண்ணியல் உயிர்களைப் பற்றிய கற்கையில் சிறப்பு பெறுபேற்றை பெற்றுள்ளார். அத்தோடு விண்வெளி ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளார். இங்கிலாந்து மாணவி டியானாவும் இவரும் சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு அனுப்பப்பட்டு, நுண்ணுயிர் ஆய்வில் ஈடுபட உள்ளனர்.ஆகையால் தமிழ் மக்களிடையே பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here