மாட்டுவண்டியில் சாவாற்றை கடக்க முயன்றவர் சாவு!

0
659

saavaaruதிருகோணமலை கிண்ணியா கிரான் பகுதியிலுள்ள சாவாற்றில் மூழ்கி காணாமற்போனவரின் சடலம் இன்று  மீட்கப்பட்டுள்ளது.

இவர் ஓட்டிச் சென்ற மாட்டுவண்டி, நேற்று சாவாற்றில் விழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஆற்றைக் கடக்க முற்பட்ட வேளையில், இரண்டு மாடுகளுடன் வண்டி நீரில் அடித்துச் செல்லப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நீரில் அடித்துச்செல்லப்பட்ட வண்டியையும், மாடுகளையும் காப்பாற்ற முற்பட்ட இருவரில் ஒருவர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் மகாமாறுக் கிராமத்தைச் சேர்ந்த ஏழு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

மாட்டு வண்டி நீரில் மூழ்கிய இடத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவிலிருந்து இன்று முற்பகல் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று நடைபெறவுள்ளன. வண்டியில் கட்டப்பட்டிருந்த மாடுகள் இரண்டினது உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here