எதிர்காலத்தில் சிறந்த வழக்கறிஞராக வரவேண்டும் என்பதே எனது விருப்பம்!

0
378

தென்மராட்சி கல்வி வலயத்துக்குட்பட்ட சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி சிங்கராசா நிலக்சனா கலைப் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடம் பெற்றார். தேசிய ரீதியில் அவர் 28ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.

எதிர்காலத்தில் சிறந்த வழக்கறிஞராக வரவேண்டும் என்பதே எனது விருப்பம் என சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி சிங்கராசா நிலக்சனா தெரிவித்தார். கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் தமிழ்மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றியவர்களில் கலைப்பிரிவில் மாவட்ட ரீதியாக முதலிடம் பெற்ற மாணவியான நிலக்சனா இன்று (ஞாயிற்றுக்கிழமை) எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “எனது சிறந்த பெறுபேற்றினைப் பெறுவதற்கு பங்காற்றிய எனது ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாடசாலையில் கற்பிப்பவற்றை முழுமையாக விளங்கி, முயற்சியுடன் படித்தமையினாலேயே எனக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது. நான் எதிர்காலத்தில் சிறந்த வழக்கறிஞராக வரவேண்டும் என்பதே எனது இலட்சியம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here