முயன்றால் முடியாதது ஏதுமில்லை – முல்.வித்தியானந்த கல்லூரி மாணவன்!

0
493

முயன்றால் முடியாதது ஏதுமில்லை என்று முல்லைத்தீவு மாவட்டத்தில் க.பொ.த. உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் இரண்டாம் நிலை பெற்ற வித்தியானந்த கல்லூரி மாணவன் தர்மகுலசிங்கம் அபிசாந் தெரிவித்துள்ளார். 2018ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர மதிப்பீடுகளின்படி குறித்த மாணவன் 1.8472 வெட்டுப்புள்ளிகளுடன், உயிரியல் பிரிவில் மாவட்டத்தில் இரண்டாம் நிலையைப் பெற்றுள்ளார். ”சிறு வயதிலிருந்தே மருத்துவராக வரவேண்டும் என்பதே எனது கனவு. கடந்த வருடம் க.பொ.த உயர்தரத்திற்கு தோற்றி உயிரியல் பிரிவில் மாவட்டத்தில் 7 ஆவது நிலையை பெற்றேன். ஆனால் அதற்காக நான் தளரவில்லை. தொடர்ந்தும் முயற்சித்தேன், அதன் விளைவாக இம்முறை இரண்டாவது நிலையைப் பெற்றுளேன்” என்று மாணவன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here