ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளின் 14-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு நாளை!

0
218

26.12.2004 அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தில் காவுகொள்ளப்பட்டு உயிர்நீத்த உறவுகளின் 14 ம் ஆண்டு நினைவு நாளான 26.12.2018    புதன்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன அந்தவகையில் வன்னிக்குரோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் 26.12.2018 புதன்கிழமை காலை 8.30 மணிக்கு புதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலய வளாகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது அதேபோன்று முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்தில்  புதன்கிழமை காலை 8 மணிக்கு விசேட ஆராதனைகளும் அஞ்சலி நிகழ்வும் இடம்பெறவுள்ளது அதேபோன்று 26.12.2018 புதன்கிழமை மாலை 4 மணிக்கு முள்ளியவளை கயட்டை பகுதியில் உள்ள நினைவாலயத்திலும் நினைவு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது எனவே உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த அனைவரும் அணிதிரளுமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here