இராணுவத்தை வெளியேற்றுவதில்லை என்று சிறீலங்கா ஜனாதிபதி உத்தரவாதம் – புதிய இராணுவத் தளபதி!

0
171

dcp1276767676வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றப் போவதில்லை என்று சிறிலங்காவின் ஜனாதிபதி உறுதியளித்திருப்பதாக, புதிய இராணுவத் தளபதி க்ரிஸாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

வடக்கில் இருந்து ஒரு இராணுவத்துறுப்பினரேனும் குறைக்கப்பட போவதில்லை.

அத்துடன் இராணுவ முகாம்களும் அகற்றப்படாது.

முப்படைகளின் தளபதி என்ற அடிப்படையில் சிறீலங்கா ஜனாதிபதி இதற்கான உத்தரவாதத்தை வழங்கி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here