Home சிறப்பு செய்திகள் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு விடுத்துள்ள கோரிக்கை!

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு விடுத்துள்ள கோரிக்கை!

0
266

இலங்கையில் இடம்பெற்ற ஆட்சிக்கவிழ்ப்பை அடுத்து, கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுவரும், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து. ருமேனியா, பிரித்தானிய ஆகிய நாடுகளின் தூதுவர்களும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், இலங்கையில் நடந்து வரும் நிகழ்வுகளை மிக நெருக்கமாக கண்காணித்து வருகிறோம். அனைத்து தரப்புகளும், முற்றிலும் சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு அமைய, செயற்பட வேண்டும் என்றும், வன்முறைகளில் இருந்து விலகி, நிறுவன செயல்முறையை பின்பற்றுமாறும், சுதந்திரமான அமைப்புகள் மற்றும் ஊடக சுதந்திரத்தை மதிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம் என்றும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here