மக்கள் மீளக் குடியேறமுடியாத கட்டாந்தரைகளே விடுவிப்பு: மாவை!

0
145

showImageInStoryவடக்கில் உயர் பாது­காப்பு வல­யத்­தி­லுள்ள மக்­களின் காணி­களை மீள வழங்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்து வந்­தாலும் இரா­ணுவம் அதற்கு தடை ஏற்­ப­டுத்தும் வகையில் காரி­யங்கள் தொடர்­கின்­றன. பலாலி கிழக்கு, வசா­விளான் பகு­தியில் விடு­விக்­கப்­பட்ட காணிகள் மக்கள் குடி­யி­ருப்­புக்­க­ளற்ற கட்­டாந்­த­ரை­க­ளாகும். மக்­க­ளுக்கு சொந்­த­மான நூற்­றுக்­க­ணக்­கான ஏக்கர் நிலத்தில் படை­யினர் விவ­சாய நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­வ­துடன், புதி­தாக கம்­பி­வேலி அடித்து அதனை தம்­வ­சப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

இதனால் மீளக்­கு­டி­யேறச் சென்ற மக்கள் மிகுந்த கவ­லைக்கும், ஏமாற்­றத்­துக்கும் ஆளா­கி­யுள்­ளனர் எனப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், தமி­ழ­ரசுக் கட்­சி யின் தலை­வ­ரு­மான மாவை சேனா­தி­ராஜா வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு நேற்றுத் தெரி­வித்தார்.

பலாலி கிழக்கு, வசா­விளான் பகு­தியில் 1,024 ஏக்கர் காணியை அவற்றின் உரி­மை­யா­ளர்­க­ளுக்கு வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனப் புதிய அரசு அறி­வித்த நிலையில், கடந்த வெள்ளிக்­கி­ழமை தமது காணி­களைப் பார்­வை­யிடச் சென்ற மக்கள் மிகுந்த ஏமாற்­றத்­துக்கு உள்­ளா­னார்கள். இது தொடர்பில் மாவை சேனா­தி­ராஜா எம்.பி. கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு கூறினார்.

தொடர்ந்து அவர் கூறு­கையில்,

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­கவும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் நாளை 23 ஆம் திகதி வளலாய் பகு­திக்கு விஜயம் செய்து மீள்­கு­டி­யேற்­றத்தை பார்­வை­யி­ட­வுள்­ளனர். இது தொடர்பில் எமக்கும் அழைப்­புக்கள் வந்­துள்­ளன. எவ்­வா­றெ­னினும், மீள்­கு­டி­யேறச் சென்ற மக்­க­ளுக்கு மிகுந்த ஏமாற்­றமே காத்­தி­ருந்­த­தாக மக்கள் கூறு­கின்­றார்கள்.

தேர்­த­லுக்கு முன்னர் அர­சாங்கம் 100 நாள் வேலைத்­திட்­டத்தில் தமிழ், சிங்­கள, முஸ்லிம் மக்­க­ளி­ட­மி­ருந்து படை­யி­னரால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்ட காணி­களை வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று கூறி­யி­ருந்­தது. இதற்கு தமிழ், சிங்­கள, முஸ்லிம் மக்கள் தங்கள் ஆணையை வழங்­கி­யுள்­ளனர். எனவே அர­சாங்கம் அர­சியல் தீர்­மானம் ஒன்றை எடுத்து அதனை மக்­க­ளுக்கு வழங்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பில் அஞ்சத் தேவை­யில்லை.

ஏலவே, இந்த விவ­காரம் தொடர்பில் நாம் ஜனா­தி­பதி, பிர­தமர், முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க ஆகி­யோ­ருடன் பேச்சு நடத்­தி­யுள்ளோம். அவர்கள் இணக்கம் தெரி­வித்­துள்­ளனர். ஆனால் மக்கள் குடி­யி­ருப்பு பகு­திகள் இன்னும் விடு­விக்­கப்­ப­ட­வில்லை. படை­யினர் மக்­களின் ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்கர் நிலப்­ப­ரப்பில் விவ­சாயம் செய்­கின்­றனர். அத்­துடன் எங்கும் முகாம்­களை நிறு­வி­யுள்­ளனர்.

தமிழ்­பேசும் மக்கள் மிகுந்த திட­சங்­கர்ப்­பத்­துடன் கடந்த ஆட்­சியை மாற்றி புதிய அர­சுக்கு வழி­விட்­டார்கள். அதன்­மூ­ல­மா­வது தங்கள் நெருக்­க­டிகள் தீரும் என்­பது அவர்­களின் எதிர்­பார்ப்­பாகும்.

எனவே, அவர்­களின் எதிர்­பார்ப்பு வீண்­போ­காத வகையில் மக்­களின் காணி­களை அவர்­க­ளுக்கு வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும். தமிழ் மக்­களின் பூர்­வீக நிலங்­களில் படை­யினர், முகாம் அமைத்தும் விவ­சாயம் மேற்­கொண்டும் வரு­வ­துடன் விவ­சாய உற்­பத்­தி­களை யாழ்ப்­பாண சந்­தை­யி­லேயே விற்­பனை செய்தும் பெரும் நெருக்­க­டி­களை ஏற்­ப­டுத்­து­கின்­றனர். இந்த நிலை­மையை மாற்­றி­ய­மைப்­பது அரசின் கட­மை­யாகும்.

மக்­களின் ஆணையைப் பெற்ற அரசு 100 நாட்­க­ளுக்குள் அவர்­க­ளுக்­கு­ரிய சொந்த காணியை மீள ஒப்­ப­டைப்­ப­தாக வாக்­கு­றுதி அளித்­தி­ருந்­தது. அதனை அவர்கள் நிறை­வேற்ற வேண்டும்.

ஜனா­தி­பதி, பிர­தமர் ஆகியோர் நாளை வரு­கை­தர திட்­ட­மிட்­டி­ருக்கும் நிலை­யிலும் காணி­களை முழு­மை­யாக ஒப்­ப­டைக்கும் நட­வ­டிக்­கைகள் இடம்­பெ­ற­வில்லை. இரா­ணுவம் புதி­தாக வேலி­ய­மைத்து மக்கள் தங்கள் குடி­யி­ருப்­புக்­க­ளுக்கு செல்ல முடி­யாது தடுத்து வரு­கின்­றது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் கொதிப்படைந்துள்ளனர். இது அனைவரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது.

மேலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய பிரதேசங்களிலும் சம்பூரிலும் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை மீள ஒப்படைக்க அரசாங்கம் அரசியல் ரீதியான தீர்மானமொன்றை முன்னெடுத்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையேல் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றமே மிஞ்சுவதாக அமையும் என்றார்.

நன்றி: வீரகேசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here