காணாமற்போனோருக்கான அலுவலகத்தினரின் அடுத்த சந்திப்பு எதிர்வரும் 13 ஆம் திகதி காலை 10 மணி தொடக்கம் பிற்பகல் 2.30 மணிவரையில் திருகோணமலையிலுள்ள இந்து கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த மாதம் மன்னார், மாத்தறை மற்றும் முல்லைத்தீவில் சந்திப்பு இடம்பெற்றதையடுத்து, இம்முறை திருகோணமலையில், காணாமாற்போனோருக்கான அலுவலகத்திலிருந்து விசேடமாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுடன், இடம்பெறவுள்ளதாக மேற்படி அலுவலகம் தெரிவித்துள்ளது.


