முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு சுமந்த 9 வது ஆண்டு நினைவு நாளில் பரிசின் புறநகர்ப்பகுதியில் ஒன்றான கிளிச்சிப் பகுதியில் அமைந்துள்ள நினைவு தூபி முன்பாக நேற்று 18.05.2018 காலை 11.00 மணிக்கு வணக்க நிகழ்வு இடம் பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப் பட்டது.
நிகழ்வில் இளையோர்களால் தமிழரின் போராட்டத்தையும் , வரலாற்றையும் இன்றைய தமிழரின் வாழ்வு குறித்தும் பிரஞ்சு மொழியில் உரையாற்றினர்.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் நிர்வாகப் பொறுப்பாளர் திரு.ப. பாலசுந்தரம் அவர்கள் தமிழரின் இன அழிப்பு குறித்தும் உரையாற்றினார். கிளிச்சி நகரசபை நகரபிதாவின் உதவியாளர்கள் நிகழ்வில் பங்கு பற்றி சுடர் வணக்கமும் மலர் வணக்கமும் செலுத்தியதுடன். தமிழரின் உரிமைக்கான போராட்டம் தொடர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர் .