2009 இன்றைய நாட்கள் மிகத்தெளிவாய் கண்முன்னே நிற்கிறது!

0
671

2009 இன்றைய நாட்கள் மிகத்தெளிவாய் கண்முன்னே நிற்கிறது. நேசித்தும் சுவாசித்தும் வந்த ஒரு தேசம் கண்முன்னே கருகி சாம்பாலகிக்கொண்டிருந்தது.
எங்கு செல்கின்றோம் எதை நோக்கிச் செல்கின்றோம் என்ற சிந்தனையே இழந்து நகர்ந்து கொண்டிருந்தோம். அனைத்தையும் இழக்கிறோம் என்ற பயம் துளிர்விட்டாலும் நம்பிக்கை அதை மேவி மறைக்க நடந்து கொண்டிருந்தோம் வீதியெங்கும் மக்கள் கூட்டம் வாகனங்களை இதுக்கு மேல் பாவிக்க முடியாத என்ற நிலைக்கு நிலப்பரப்பு குறுகி இருந்தது.எதிரியின் ரவைக்கூடுகளில் இருந்து வரும் ஒவ்வொரு ரவையும் தெருக்களில் நிரம்பிவழியும் யாரோ ஒருவரை துளைத்து விழுத்திக்கொண்டே இருக்க அடுத்தது யாரென தெரியாமல் நகரந்துகொண்டிருந்த கனதியான நாள் இது……!

-தவபாலன் திருநிலவன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here