இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் பலி !

0
115


சிறீலங்கா ஹொரணை, பெல்லப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது .
இன்று பகல் 13.20 மணியளவில் தொழிற்சாலையில் உள்ள அமோனியா அமிலம் அடங்கிய குழியை சுத்தம் செய்வதற்காக சென்ற ஊழியர் ஒருவர் அந்தக் குழிக்குள் விழுந்துள்ளார்.
இதனையடுத்து அவரை காப்பாற்றுவதற்காக சென்ற பிரதேச மக்கள் சிலர் நச்சு வாயுவை சுவாசித்துள்ளதால் பாதிப்படைந்துள்ளதுடன், பாதிப்படைந்த 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தொழிற்சாலையின் ஊழியரும் பிரதேசவாசிகள் நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர்.
ஏனையவர்கள் ஹொரணை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக  தெரிவிக்கப் பட்டுள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here