பிரான்சு அதிபர் இம்மானுவேல் மைக்ரோன் இந்தியா  பயணம் !

0
293


பிரான்சு அதிபர் இம்மானுவேல்மைக்ரோன் நான்கு நாட்கள் அரசுப் பயணமாக நேற்று (09)இரவு இந்தியா சென்றுள்ளார். அவரை இந்திய பிரதமர் நரேந்திர மோதி நேரில் சென்று வரவேற்றுள்ளார்.
2017 மே அதிபர் தேர்தலில்  பிரான்சின் அதிபராக தெரிவான பின்பு இந்தியாவிற்கான தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டிருக்கும் பிரான்சு அதிபர் இம்மானுவேல் மைக்ரோன் தனது அமைச்சர்களுடன் சென்றிருப்பது குறிப்பிடத் தக்கது .
மின் தேவை அதிகம் உள்ள இந்தியாவுக்கு பிரான்சில் தயாரிக்கப்பட்ட ஆறு அணு உலைகளை விற்கவும் இந்தப் பயணத்தில் மைக்ரோன் முயல்வார் எனத் தெரிகிறது.
இந்தப் பயணத்தின்போது வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் இருநாடுகளிடையிலான பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவது ஆகியவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இந்தியாவுக்கு 36 ரஃபேல் ஜெட் போர் விமானங்களை விற்கும் உடன்படிக்கையை இறுதி செய்வதில் பிரான்சு தீவிரமாக உள்ளது.
இந்தியப் பெருங்கடலில் இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாகவும் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூரிய மின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் செயல்படும், சூரிய வெளிச்சம் அதிகம் உள்ள நாடுகளின் கூட்டமைப்பான ‘இன்டர்நேஷனல் சோலார் அலையன்ஸ்’ மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவை பற்றியும் மோடி- மைக்ரோன் இருவரும் விவாதிப்பர்.
இந்தப் பிராந்தியத்தில் இந்தியாதான் தங்கள் நாட்டுக்கு முதன்மையான கூட்டாளி என்று கூறியுள்ள பிரான்சு அதிபர் இம்மானுவேல் மைக்ரோன் . இந்தியாவுக்கு பிரான்சு தான் ஐரோப்பாவுக்கான நுழைவாயிலாக இருக்கவேண்டும் என்று தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here