சென்னை விமான நிலையத்தில் இளைஞர் தற்கொலை!

0
209

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இளைஞர் ஒருவர் நேற்று காலை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் வருகை பகுதியில் நேற்றுக் காலை 6.45 மணி அளவில் வாலிபர் நின்று கொண்டிருந்தார். அந்த வாலிபர் கட்டை காற்சட்டை அணிந்திருந்தார். இந்தப் பகுதியில் கார்மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதற்காக பாலம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. தரை தளத்தில் இருந்து சுமார் 50 அடி உயரத்தில் உள்ள இந்த பாலத்தில் இருந்து வாலிபர் திடீரென கீழே குதித்தார்.
இதில் உடல் சிதறிய அவர் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார். இதைப் பார்த்ததும் விமான நிலையத்தில் நின்றிருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
தற்கொலை செய்து கொண்ட இளைஞர் பெயர் சைத்தன்யா (30) என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம்குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here