2011 ஆம் ஆண்டு கொலை செய்த 27 வயது இளைஞருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது!

0
359

2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். கொலை தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி சட்ட மா அதிபரால் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இரண்டாம் , மூன்றாம் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்படாமையால் அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
முதலாவது பிரதிவாதிக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரனால் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here