சிறீலங்கா படைகளால் தமிழரின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
ஊர்காவற்துறையில் ஆக்கிரமித்திருக்கும் சிறீலங்கா கடற்படையினருக்கு மக்களின் பூர்வீக காணிகளை அளவிட எடுக்கப்பட்ட முயற்சி மக்களின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்டுள்ளது.
நேற்று (25) காணி அளவிட வந்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தை தொடர்ந்து நில ஆக்கிரமிப்பு முயற்சி கைவிடப்பட்டுள்ளது.