பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக நீக்குவதற்கு சிறீலங்கா அரசு அவசர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் நேற்றுமுன்தினம் (20)நடந்த ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் சிறீலங்கா விற்கும் இடையிலான 21 ஆவது கூட்டுக் குழுக் கூட்டத்தி லேயே, இவ்வாறு வலியுறுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கும், பன்னாட்டுத் தரநியமங்களுக்கு ஏற்ற புதிய சட்டத்தை கொண்டு வருவதற்கும் அவசர நடவடிக்கையை சிறீலங்கா அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள எஞ்சிய கைதிகளின் பிரச்சினையை கூடிய விரைவில் தீர்ப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட் டது.
Home ஈழச்செய்திகள் சிறீலங்கா பயங்கரவாதச் சட்டத்தை உடனடியாக நீக்க ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது!!


