புதுக்குடியிருப்பில் குளிக்கச்சென்ற மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலி!

0
282

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கேப்பாப்புலவு வீதியில் உள்ள கள்ளியடி ஆற்றில் குளிக்கசென்ற மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பினை சேர்ந்த 7 இளைஞர்கள் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளினை கழிப் பதற்காகக் கள்ளியடிப்பகுதியில் உள்ள ஆற்றிற்கு சென்றுள்ளார்கள் அங்கு குளித்துக்கொண்டிருந்தபோது இரு வரை காணவில்லை. இந்நிலையில் நீண்ட நேரம் இருவரையும் மற்ற இளைஞர்கள் தேடியுள்ளார்கள்.

இதன்போது குறித்த இருவரும் ஆற்றின் சேற்றில் புதைந்துள்ளமை தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கிராம மக்கள் மற்றும் பொதுமக்க ளின் துணையுடன் இருவரின் உடலங்க ளையும் மீட்டுள்ளார்கள்.

குறிப்பிட்ட ஆற்றுப்பகுதியில் அதிகளவான மண் எடுக்கப்பட்டுள்ளதால் ஆழமான பகு தியாகவும் அதேவேளை சேறு நிறைந்த பகு தியாகவும் காணப்பட்டுள்ளது. இதனாலே சேற்றில் இருவரும் புதைந்துள்ள தாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில்புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் (2019) வணிக பிரிவில் கல்வி கற்கும் புதுக்குடியிருப்பு சிவநகரை சேர்ந்த தவராசசிங்கம் தனுசன் (வயது 17) 2019 உயிரியல் பிரிவில் கல்வி கற்கும் சிவராசா பகீரதன் (வயது 17) ஆகிய இரண்டு மாண வர்களே நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியி ருப்பு பொலிஸார் உடலங்களை எடுத்து புதுக் குடியிருப்பு மருத்துவ மனையில் சேர்த்துள்ள னர். மருத்துவமனை மரண விசாரணை அதிகாரியின் விசாரணை அறிக்கை யின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படை க்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்து ள்ளனர்.
இதில் பகீரதன் என்னும் மாணவர் கட ந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த சாதாரண பரீட்சையில் 9ஏ சித்திகளை பெற்ற மிகவும் திறமையான மாணவர் என்பது குறிப்பிடத்த க்கது
இதே போன்று கடந்த தீபாவளி நாள் அன்று முல்லைத்தீவு கடலில் மூழ்கி இரண்டு உயர் தர பிரிவு மாணவர்கள் பலியாகியிருந்தமை யும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here