காணாமல் போன குடும்பஸ்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

0
132

ஒரு வாரத்துக்கு முன்னர் காணாமல் போயிருந்த குடும்பஸ்தர் ஒரு வர் நேற்றுமுன்தினம் கோண்டாவில் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கண்டி வீதி கொடிகாமத்தை சேர்ந்த  4 பிள்ளைகளின் தந்தையான வைத்திலிங்கம் சுப்பிரமணியம் (வயது 51) என்பவரே மேற்படி உயிரிழந்தவராவார்.
குறித்த நபர் யாழ் மாநகரசபை யில் கடமையாற்றி வந்துள்ளார். கடந்த 16 ஆம் திகதி வீட்டில் இருந்து தனது தாயின் வீட்டுக்கு சென்றுவிட்டு வேலைக்கு செல்வதாக
மனைவியிடம் தெரிவித்து சென்றுள்ளார்.

கோண்டாவில் பழனியாண்டவர் கோவில் பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டு வேலைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். அப்போது அந்த வழியில் உள்ள கிணறு ஒன்றில் தவறுதலாக விழுந் துள்ளார்.
வீட்டுக்கு திரும்பி வரவில்லை என மனைவி தாய்வீடு, மற்றும் அலுவலகத்தில் விசாரித்துள்ளார் அவர் எங்கும் வரவில்லை என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாடு மேய்ப்பதற்கு சென்ற ஒருவர் கிணற் றில் இருந்து துர்நாற்றம் வீசுவதை அறிந்து எட்டி பார்த்த போது அங்கு சடலம் ஒன்று காணப்பட்டுள்ளது.

பொலிஸாரூடாக சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட போது, மனைவியார் நேற்று சடலத்தை அடையாளம் காட்டியிருந்தார். மரண விசார ணையை யாழ்.போனா வைத்தியசாலை மரணவிசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here