வெளிநாட்டவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வர அஞ்சுகின்றனர்!

0
269

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வாள்வெட்டுச் சம்பவங்களால், வெளிநாடுகளில் உள்ளவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருவதற்கு அஞ்சுவதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் வாள்வெட்டு கலாசாரம், கஞ்சா கலாசாரம், போதைப்பொருள் கலாசாரம் என்பன முன்னொருபோதும் இல்லாத வகையில் தலைதூக்கியுள்ளதால் வெளிநாட்டவர்கள் நம்பி வர தயங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான குறுக்கு வழிகளில் மாணவர்கள் ஒருபோதும் செல்லாமல், நற்பிரஜைகளாக உருவாகி தமது இனத்திற்கும் மண்ணுக்கும் பெருமைசேர்க்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here