சிறீலங்கா அம்பாந்தோட்டை மாவட்டம், அம்பலாந்தோட்டை கொகேகல லய்ம பகுதியில் சிறீலங்கா காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (11) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த வீதியூடாகப் பயணித்த பார ஊர்தி ஒன்றை சோதனைச் சாவடியில் இடைமறிக்கப் பட்டதாகவும் பாரஊர்தி நிறுத்தாமல் சென்ற நிலையிலேயே சிறீலங்கா காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது .இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளார் .
இதனிடையே, அம்பலாந்தோட்டை நீதிமன்றில் குறித்த பார ஊர்தி சாரதியும் மற்றொருவரும் சட்டத்தரணியின் உதவியுடன் சரணடைந்தனர்.
அவர்களை விசாரித்தபோது, வாழைத் தார்களைத் திருடிச் சென்றபோதே காவல்துறை வழிமறித்ததாகவும், பிடிபட்டுவிடுவோம் என்ற பயத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், காவல்துறை யினரின் சூட்டுக்கு இலக்காகிய சகாவையும் வாழைத் தார்களையும் சற்றுத் தொலைவில் இறக்கிவிட்டுத் தப்பிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.