கட­லில் குளிக்­கச் சென்ற நண்­பர்­கள் இரு­வர் பலி உடலங்கள் மீட்பு !

0
824


நேற்று (18) முல்­லைத்­தீவுக் கட­லில் குளிக்­கச்­சென்ற இளை­ஞர்­கள் இரு­வர் திடீ­ரெ­னக் கட­லில் மூழ்­கிய நிலை­யில், நான்­கரை மணி­நேரத் தேடு­த­லின் பின்­னர் ஒரு­வ­ரின் சட­லம் மீட்­கப்­பட்­டது.
அவ­ரது நண்­ப­னான மற்­றைய இளை­ஞ­னைத் தேடும் பணி இன்று அதிகாலை வரை­யும் தொடர்ந்­தது. இன்று காலை அவரது சடலமும் மீட்கப்பட்டது.
முல்­லைத்­தீவு உண்­ணாப்­பி­ல­வைச் சேர்ந்த அன்­டனி கிளோட்­டஸ் வினோ­தன் குறுஸ் (வயது –-18) என்ற மாண­வ­னின் சடலமே நேற்று மாலை 6.30 மணிக்கு மீட்­கப்­பட்­டது.
மணற்­கு­டி­யி­ருப்­பைச் சேர்ந்த அமல்­ராஜ் டினோ­ஜன் (வயது-–17) என்ற மற்­றைய மாண­வனின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டது.
முல்­லைத்­தீவு நக­ரச் சுற்­று­லாக் கடற்­க­ரைப் பகு­திக் கட­லில் ஏழு இளை­ஞர்­கள் நேற்று மதி­யம் குளிக்­கச் சென்­றுள்­ள­னர். திடீ­ரென அவர்­க­ளில் இரு­வரை அலை இழுத்­துச் சென்­றது. எஞ்­சிய ஐவ­ரும் உட­ன­டி­யா­கக் கரை­சேர்ந்­த­னர். அவர்­கள் ஏனை­யோ­ருக்­குத் தக­வல் வழங்­கி­னர். கடற் றொ­ழி­லா­ளர்­கள் துரி­த­மா­கச் செயற்­பட்டு பட­கு­க­ளில் தேடு­தல் நடத்­தி­னர். ஆனால் உட­ன­டி­யாக அவர்­களை மீட்க முடி­ய­வில்லை..
மாண­வர்­கள் இரு­வர் அலை­யில் சிக்­குண்டு காணா­மல் போன செய்தி வேக­மா­கப் பர­வி­யது. கடற்­க­ரைப் பகு­தி­யில் மக்­கள் குவி­யத் தொடங்­கி­னர்.
கடற்­றொ­ழி­லா­ளர்­க­ளின் தேடு­தல் துரி­த­மாக ஆரம்­பிக்­கப்­பட்­ட­போ­தும் மாண­வர்­க­ளைக் கண்­டு ­பி­டிக்க முடி­ய­வில்லை. சம்­ப­வம் இடம்­பெற்று இரண்­டரை மணி நேரத்­தின் பின்­னர் கடற்­ப­டை­யி­னர் அங்கு வந்­த­னர்.
இளை­ஞர்­கள் அலை­யில் இழு­பட்­டுச் சென்­ற­தா­கச் சொல்­லப்­பட்ட பகு­தி­யில் கரை வலை­யினை விரித்து, வலை­யின் இரண்டு பக்­க­மும் மக்­கள் திரண்டு இழுத்­த­னர்.
மீன­வர்­கள் இதன் பின்­னர் திருக்­கை­வலை எனப்­ப­டும் ஆழச்­செல்­லும் வலை­யி­னைப் பயன்­ப­டுத்தி அந்­தப் பகு­தி­யில் நான்கு பட­கு­கள் சகி­தம் தேடு­தல் நடத்­தி­னர்.
இதில் ஒரு­வ­ரது சட­லம் மீட்­கப்­பட்­டது. சட­லம் கரைக்கு கொண்டு வரப்­பட்­ட­தும் உற­வி­னர்­கள் கத­றி­ய­ழு­த­னர். மற்­றை­ய­வ­ரைத் தேடும் பட­லம் இன்று அதிகாலை வரை வெளிச்­சம் பாய்ச்­சி­யும் தொடர்ந்­தது. இன்று காலை மற்றவரது சடலமும் மீட்கப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here