யாழில் வயோதிபத் தாய் அடித்துக் கொலை – சந்தேகத்தில் மகன் கைது!

0
137

யாழ்ப்பாணம் இராசாவின் தோட்ட பகுதியில் வயோதிப பெண்ணொருவர் அடித்து கொலை செய் யப்பட்டுள்ளார்.

குறித்த வயோதிப பெண்மணி; மனநலம் பாதிக்கப்பட்ட மகனா லேயே கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

இதில் அதேயிடத்தை சேர்ந்த 70 வயதுடைய செ.ரத்னாம் பிகை என்ற வயோதிப பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று இராசாவின் தோட்டம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மின்சார இணைப்பு வேலைக்கு மின்சார சபை பணியாளர்கள் சென்றுள்ளனர்.

அந்த சமயம் குறித்த வீட்டின் கிணற்றடி பகுதியில் நபர் ஒருவர் இருந்துள்ளார். அவரது நடத்தையில் சந்தேகம் கொண்ட மின்சாரசபை பணியாளர்கள் ஏன் இந்த இடத்தில் தனியாக இருக்கின்றீர்கள் என கேட்டுள்ளார்கள்.

அப்போது அம்மாவை அடித்து கொன்று விட்டேன். அதனால் தான் இங்கு இருந்து பார்த்துகொண்டு இருக்கின்றேன் என பதில் கூறியுள்ளார்.

எனினும் அதனை உடனடியாக நம்ப மறுத்த பணியாளர்கள் கிணற்று அருகில் சென்று எட்டி பார்த்துள்ளார்கள்.

அப்போது சடலம் தண்ணீரில் மிதந்து கொண்டுள்ளதை அவர்கள் அவதானித்துள்ளார்கள். இதனை அடுத்து உடனடியாகவே யாழ். பொலிஸாருக்கு மின்சார பணியாளர்களால் தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், சந்தேகத்தின் பேரில் குறித்த வயோதிப பெண்ணின் மகனான செ.சுதர்சன் (வயது35) என்பவரை வீட்டில் வைத்தே கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மனநிலை பாதிக்கப்பட்ட வர்களை சிகிச்சைக்கு உட்படுத்தாமல் இவ் வாறு வீட்டில் வைத்திருப்பது விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ள மருத்துவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டிருந்தவர்களை தெல்லிப்பழை அல்லது யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்று சிகிச்சை பெறுவதை உறுதிப் படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here