சிங்கள அரசியல் கைதிகளுக்கு ஒரு நீதி ! தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதியா?

0
254


அரசியல் கைதிகளின் பிரச்சனைக்கு உரிய தீர்வை வழங்க கோரியும் உண்ணாவிரத கைதிகளின் கோரிக்கையை உடனடியாக தீர்க்க கோரியும் யாழ் பல்கலைக்கழக சமூகத்தினர் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை தற்பொழுது முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணிக்கு இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
அனுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது வழக்கு நடவடிக்கைகளை தமிழ் நீதிமன்றங்களுக்கு மாற்றுமாறு கோரியும் தமது வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்த கோரியும் கடந்த 9 நாட்களாக உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள நிலையிகேயே யாழ் பல்கலைக் கழக சமூகம் இக் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here