போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் உட்பட நால்வர் கைது !

0
183

நேற்று (02) மானிப்பாய் காவல் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் நடவடிக்கையின் மூலம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது..
கைதான நால்வரும் யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியினை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் 26 வயதான யுவதிகள் என மேலும் தெரிய வருகிறது..
ஹெரோயின் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் அறிந்து கொண்ட காவல்துறையினர் தாமும் ஹெரோயின் வாங்குவது போல் பாசாங்கு செய்து சந்தேகநபர்களை கைது செய்திருந்தனர்.
அத்துடன் உடமையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிராம் அளவிளான 20 மேற்பட்ட சிறு முடிச்சுகளில் சுற்றி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருளினை கைப்பற்றியுள்ளனர்.
மேலும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட தொலைபேசியில் இருந்து குறித்த போதைப்பொருள் யாரால் விற்பனைக்கு வழங்கப்பட்டது என்பது தொடர்பில் புலன் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here