மீனவரைப் பலி கொண்டது சிறீலங்கா கடற்படை !

0
353

காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் படகுமீது சிறீலங்கா கடற்படையின் தாக்குதல்  படகு மோதி விபத்துக்குள்ளானதில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு மீனவர் காயமடைந்துள்ளார்.
காரைநகர் கடற்பரப்பில் நேற்று இரவு (30) காரைநகர் வெடியரசன் வீதியைச் சேர்ந்த இரு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
இதன்போது ஒருவர் கடலில் வலையை வீசிக்கொண்டிருந்த நிலையில் மற்றைய நபர் படகில் இருந்துள்ளார். அங்கு வேகமாக வந்த சிறீலங்கா கடற்படையின் தாக்குதல் படகு மோதியதில் மீனவர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது காரைநகர் வெடியரசன் வீதிப்பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய கணபதிப்பிள்ளை கேதீஸ்வரன் என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் குறித்த பகுதியைச் சேர்ந்த தவராசா சத்தியராஜா காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here