தேசத்திற்காய் தன்னைத் தந்த அண்ணன் நினைவாய் ஒரு துளி…

0
363

தமிழ் மக்களுக்காக பட்டினித் தீயில் தன்னை உருக்கி ஆகுதியாக்கிய தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நினைவாக யாழ்.இந்துக் கல்லூரியில் குருதிக்கொடை முகாம் ஒன்று இன்று 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் இடம்பெற்றது.  2012 க.பொ.த உயர்தரப் பிரிவு மாணவர்களின் ஒழுங்குபடுத்தலில் இந்த இரத்தான முகாம் நடைபெற்றது.

வருடா வருடம் திலீபனின் நினைவேந்தல் காலத்தில் இந்த ; குருதிக்கொடை நடத்தப்பட்டு வருகின்றது. இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் அனைவரையும் இதில் பங்கெடுக்குமாறு ; குருதிக்கொடை முகாம் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here