நான் தேசத்துரோகி என்றால் கொலை, கொள்ளை, ஆட்­க­டத்தல், ஊழல்­ செய்த மஹிந்த யார்? – சரத்பொன்­சேகா

0
660

யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டுவந்து இந்த நாட்டை அமை­தி­யாக்­கிய நான் தேசத் துரோகி என்றால் இந்த நாட்டில் கொலை, கொள்ளை, ஆட்­க­டத்தல், ஊழல்­களை செய்த மஹிந்த தரப்பு யார்? அவர்­களா தேசப்­பற்­றா­ளர்கள் என சரத்பொன்­சேகா கேள்வி எழுப்­பினார். இரா­ணுவ வீரர் என்­ப­தற்­கா­கவோ, அதி­காரி என்­ப­தற்­கா­கவோ எவ­ரது குற்­றத்­துக்கும் சிறப்புச் சலு­கைகள் இல்லை. சீரு­டையில் குற்றம் செய்­தாலும் தண்­டிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.
கிரி­பத்­கொடை பிர­தே­சத்தில் நேற்று சரத் பொன்­சே­கா­விற்கு எதி­ராக பொது எதி­ர­ணி­யினர் எதிர்ப்பு ஆர்ப்­பாட்டம் ஒன்றை முன்­னெ­டுத்த நிலையில் அமைச்சர் சரத் பொன்­சே­கா­விற்கு ஆத­ர­வாக கிரி­பத்­கொடை பிர­தே­சத்தில் நடத்­தப்­பட்ட நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்­ட­போதே அவர் இதனை தெரி­வித்தார்.
அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்
என்னை தேசத் துரோகி என விமர்­சிக்கும் நபர்கள் யார் என்ற கேள்வி எம்­மத்­தி­யிலும் உள்­ளது. யுத்த கால­கட்­டத்தில் அனு­ரா­த­பு­ரத்தை தாண்­டவே அஞ்­சிய நபர்கள் இன்று என்னை துரோகி என விமர்­சிக்­கின்­றனர். இன்று நாட்டில் இவர்கள் சுதந்­தி­ர­மாக வாழ்­வதும் , விரும்­பிய இடத்­திற்கு சென்று வரு­வதும் , ஊட­கங்கள் மக்கள் அனை­வரும் தைரி­ய­மாக செயற்­ப­டு­வதும் என்னால் தான் என்­ப­தனை மறந்­து­வி­டக்­கூ­டாது. நான் யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்த கார­ணத்­தினால் தான் இன்று அனை­வரும் சுதந்­தி­ர­மாக வாழ முடி­கின்­றது. யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்த நான் தேசத் துரோகி என்றால் கடந்த பத்து ஆண்­டு­களில் நாட்டில் பாரிய அளவில் ஊழல் மோச­டி­களை செய்த, கொலை கொள்­ளை­களை புரிந்த, நாட்டின் ஜன­நா­ய­கத்தை பறித்து மக்­களின் சுதந்­த­ரத்தை பறித்த மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து செயற்­பட்ட நபர்கள் தேசப் பற்­றா­ளர்­களா? இந்த வார்த்­தையில் எனக்கு சந்­தேகம் உள்­ளது.
அர­சாங்கம் என்ற வகையில் நாம் கருத்­துக்­களை முன்­வைக்கும் போது மிகவும் பொறுப்­பு­டனும், அவ­தா­ன­மா­கவும் கருத்­துக்­களை முன்­வைக்க வேண்டும். கடந்த காலத்தில் இரா­ணு­வத்தில் குற்­றங்கள் புரிந்த நபர்­க­ளுக்கு விசேட சலு­கைகள் வழங்­கப்­ப­ட­வில்லை. மனம்­பேரி வழக்கு, எம்­பி­லிப்­பிட்­டிய மாணவர் கொலை வழக்­குகள் உள்­ளிட்ட சம்­ப­வங்­களை அனை­வரும் தெரிந்­தி­ருப்­பீர்கள். அப்­போது சீரு­டைக்கு என்று விசேட சலு­கைகள் எவையும் யாருக்கும் வழங்­கப்­ப­ட­வில்லை. குற்­றத்­துடன் சம்­பந்­தப்­பட்ட உயர் அதி­கார்கள் அனை­வரும் சிறை­களில் அடைக்­கப்­பட்­டனர். அப்­போது அர­சாங்கம் மக்கள் பக்கம் இருந்தே செயற்­பட்­டது. மக்கள் பக்கம் இருந்தே தவறு செய்­த­வர்­க­ளுக்கு தண்­டனை வழக்­கப்­பட்­டது.
இன்றும் அர­சாங்கம் மக்­களின் பக்கம் இருந்தே செயற்­பட்டு வரு­கின்­றது. மக்கள் பக்கம் நின்று தவறு செய்­ப­வர்­களை தண்­டித்து செயற்­ப­டு­வதை தவிர்த்து இரா­ணுவ வீரர் என்ற கார­ணத்­திற்­காக, சீருடை அணிந்­தி­ருந்த கார­ணத்­தினால் அவ­ரது குற்­றங்­களை மறைத்­துக்­கொண்டு மக்­களின் நியா­யங்­களை நிரா­க­ரித்தால் அதை மக்கள் ஒரு­போதும் ஏற்றுகொள்ள மாட்டார்கள். இதனை அனைத்து தலைவர்களும், அரச தலைவர்களும் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். ஆகவே எமது நல்லாட்சி அரசாங்கத்தில் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் அவர்களின் இழப்புகளுக்குமே நாம் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here