மட்டக்களப்பில் செஞ்சோலை படுகொலையின் 11ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள்!

0
111

செஞ்சோலை படுகொலையின் 11 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் மட்டக்களப்பு கோப் சென்டர் மண்டபத்தில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. 

தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஏற்பாட்டில் இன்று காலை 11 மணியளவில் தீபம் ஏற்றி   ஆரம்பிக்கப்பட்டது.
வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி காலை 7 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 61 பேர் உயிரிழந்ததுடன் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
குறித்த படுகொலைக்கு நீதிகோரியும், உயிரிழந்த மழலைகளின் ஆத்மசாந்திக்காகவும் இந்த அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here