நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு விழா நாளை!

0
210

யாழ்ப்பாண மாநகர சபையின் சைவசமய விவகாரக்குழு நல்லைக் கந்தன் மகோற்சவ காலத்தில் வெளியிடும் நல்லைக்குமரன் “வெள்ளி விழா மலர்” வெளியீட்டு விழா நாளை காலை செவ்வாய்க்கிழமை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் யாழ். மாநகரசபை ஆணையாளர் பொ.வாகீசன் தலை 
மையில் இடம்பெறும் இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவனும் சிறப்பு விருந்தினராக யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் டாக்டர் ப.சத்திய மூர்த்தியும் கலந்து கொள்ளவுள்ளனர். 

இந்நிகழ்வில் இந்த ஆண்டுக்கான யாழ்.விருது தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகனுக்கு வழங்கி வைக்கப்படவுள்ளது.

சைவ சமய விவகாரக் குழுவினால் வெளியிடப்படும் நல்லைக்குமரன் வெள்ளி விழா மலர் நல்லூர் ஆலயத்தில் இருந்து மங்கல வாத்தியம் சகிதம் ஊர்வலமாக நாவலர் கலாசார மண்டபத்திற்கு எடுத்துச் 
செல்லும் நிகழ்வு இடம்பெறும்.

இந்நிகழ்வு காலை 08.00மணிக்கு இடம்பெறும். நல்லைக்குமரன் 25ஆவது மலரின் ஆய்வு உரையை யாழ்.பல்கலைக் கழக பட்டப்பின் படிப்புகள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன் நிகழ்த்துவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here